வெள்ளி, 5 ஜூன், 2015

2 ஜூன் 2015 அன்று இந்திய மாணவர் இஸ்லாமிய அமைப்பு (SIO) கோவையில் நடத்திய  தடையை மீறிய ஆர்பாட்டத்தின் காணொளி
கோவை ஆசாத்நகரில் பூங்காவாக மாறிய குப்பைத்தொட்டி!!!
TASK, ஜமாஅத்தே இஸ்லாமியுடன் இணைந்து இந்திய மாணவர் இஸ்லாமிய அமைப்பு (SIO) களப்பணி ஆற்றியது.
கோவை பூங்காநகர் கிளைத்தலைவர் சகோ.நவாஸ் தலைமையிலான குழுவினர் ஒத்துழைப்பு வழங்கின

புதன், 3 ஜூன், 2015


தந்தை பெரியார் அம்பேதகர் வாசகர் வட்டத்தினை(APSC) தடைசெய்ததை
கண்டித்து SIO கோவை நடத்தும்
#போராட்டம்

சென்னை ஐ.ஐ.டி கல்வி வளாகத்திற்குள் இயங்கி வரும் தந்தை பெரியார் அம்பேதகர் வாசகர் வட்டத்தினை மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சகம் தடைசெய்ததை இந்திய மாணவர் இஸ்லாமிய அமைப்பு (sio) வன்மையாகக் கண்டிக்கின்றது.

பிரதமர் மோடி தலைமையில் மத்திய அரசு பொறுப்பேற்றதிலிருந்து தொடர்ச்சியாக இதுபோன்று பல்வேறு செயல்பாடுகளை சிறுபான்மையினர் மற்றும் பிற்படுத்தப்பட்டவர்களுக்கெதிராக செய்து வருவது நாட்டின் அமைதியை சீர்குலைக்கும் செயல் என இந்திய மாணவர் இஸ்லாமிய அமைப்பு (sio) கருதுகின்றது.

மோடி அரசின் குறைகளை விமர்சித்ததற்காகவும், பெரியார் மற்றும் அம்பேத்கரின் கருத்துக்களை மாணவர்கள் மத்தியில் பரப்பியதற்காகவும் இந்த வாசகர் வட்டம் தடைசெய்யப்பட்டுள்ளது.

ஜனநாயக நாட்டில் தாங்கள் சார்ந்துள்ள சித்தாந்த்தை அல்லது அதன் தலைவர்களின் கருத்துக்களை கூறுவதற்கு அனைவருக்கும் உரிமை உள்ள நிலையில், மத்திய அரசின் இத்தகைய போக்கு கருத்துச் சுதந்திரத்தின் குரல்வளையை நெருக்குவதாக உள்ளது. மேலும், தன் குறைபாடுகளைக் குறித்த விமர்சனங்களைத் தாங்கிக் கொள்ள முடியாத பலவீனமான அரசாக இன்றைய மத்திய அரசு செயல்படுகின்றது.

அண்ணல் அம்பேத்கர் அவர்களும், தந்தை பெரியார் அவர்களும் நம் நாட்டிற்கு அளப்பரிய பங்காற்றியுள்ளார்கள். இவரகள் இருவரும் உலகளாவிய தலைவர்கள். இவரக்ளைப் பற்றியும், அவர்கள் கூறிய கருத்துக்களைப் பற்றியும் பேசும் போதுதான் நாட்டில் சமத்துவம் உயிர்த்தெழும்; ஜாதியமும், மூட நம்பிக்கைகளும் நம்மைவிட்டு ஒழிந்து போகும்.

இவர்களின் கருத்துக்களை நினைவு கூறுவதன் மூலமே நாட்டை வளர்ச்சிப்பாதையில் அழைத்து செல்ல முடியும். இத்தகைய சிந்தனை மற்றும் செயல்பாட்டிற்கு எதிராக மத்திய அரசு செயல்படுவது சிறுபான்மையினர் மற்றும் பிற்படுத்தப்பட்டவர்களுக்கெதிராக செய்யப்படும் அநீதி என இந்திய மாணவர் இஸ்லாமிய அமைப்பு (sio) கருதுகின்றது.

மேலும் தந்தை பெரியார், அம்பேத்கர் வாசகர் வட்டம் சிறப்புற செயல்படுவதற்கு மத்திய அரசும், ஐ.ஐ.டி கல்வி வளாகமும் அனுமதியளிக்கும்படி இந்திய மாணவர் இஸ்லாமிய அமைப்பு (sio) கேட்டுக் கொள்கின்றது. இதனை வலியுறுத்தி இன்று (2/06/15) மாலை 4:30 மணிக்கு உக்கடத்தில் வைத்து போராட்டம் நடைபெற்றது.நடைகிறது

திங்கள், 1 ஜூன், 2015


எல்லாப் புகழும் இறைவனுக்கே..!


Sio கோவைமாவட்டம் சார்பாக INFORMIX 15 என்ற தலைப்பில் கல்வி வழிகாட்டுதல் நிகழ்ச்சி கிளையளவில் நடத்தப்பட்டது.
இந்நிகழ்ச்சியானது கோவை மாவட்ட அளவில் கரும்புக்கடை , அல்அமீன் காலனி , குனியமுத்தூர் , குறிச்சி கிளைகளில் நடைப்பெற்றது.
இந்நிகழ்வில் மாணவர்களை மனதளவில் ஊக்குவிக்க உரைகளும் , பல்துறைச் சார்ந்த அறிஞர்களின் அறிவுரைகளும் , கல்வி கண்காட்சியும் நடைப்பெற்றது. இந்நிகழ்வின் முத்தாய்ப்பாய் மாணவர்களின் திறமையை கண்டறியும் சோதனையும் (psychometric test) நடைப்பெற்றது.
இந்நிகழ்வில் மொத்தமாக 600க்கும் மேற்ப்பட்ட மாணவ , மாணவிகள் கலந்துக்கொண்டனர்.
கலந்துக்கொண்ட மாணவர்கள் அனைவரும் அவர்களின் திறமைக்கேற்ற துறைகளை தேர்ந்தெடுத்து அத்துறைகளில் வெற்றிப் பெற இறைவன் அருள்ப் புரிவானாக..!
இந்திய மாணவர் இஸ்லாமிய அமைப்பு (SIO) கோவையின்
மக்கள் தொடர்புச் செயலாளர்
U. முஹம்மத் அலி அவர்கள்
வெளியிடும் பத்திரிகை செய்தி:
கல்வித்துறையில் நிகழும் அநீதி மற்றும் சமநிலையின்மையைக் கண்டித்து
கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்
நாட்டில் வசிக்கும் ஒவ்வொரு குடிமகனுக்கும் கல்வி வழங்குவது அரசின் கட்டாயக் கடமை. அப்படியான ஒரு திட்டத்தைதான் நாடு விடுதலை அடைந்த தருணத்தில் சட்ட அமைச்சர் அம்பேத்கர் அவர்களும் கல்வி அமைச்சர் அபுல் கலாம் ஆசாத் அவர்களும் முன் வைத்தனர். வேறு சிலரின் சூழ்ச்சியால் அத்திட்டம் கைவிடப்பட்டது.
60 ஆண்டுகளுக்கு மேல் ஆகியும் அனைவருக்குமான கல்வி இந்தியாவில் சாத்தியம் இல்லாமல் போயிற்று. 2010ல் மன்மோகன் சிங்கின் தலைமையின் கீழ் அனைவருக்கும் கட்டாய கல்வி உரிமைச் சட்டம் (RTE) நடைமுறைக்கு வந்தது. ஆனால் இதுவரையிலும் மத்திய மாநில அரசுகள் இதை நடைமுறைப்படுத்துவதற்கான போதிய நடவடிக்கைகளை மேற்கொள்ளவில்லை.
அனைவருக்கும் கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டுமெனில் நாட்டில் பல்லாயிரக்கணக்கான பள்ளிக்கூடங்கள் வேண்டும்.
1:30 என்ற ரீதியில் 30 மாணவர்களுக்கு ஒரு ஆசிரியர் வீதம் பல்லாயிரக்கணக்கான ஆசிரியர்களை ஏற்படிதியிருக்க வேண்டும். இப்படியான ஒரு ஏற்ப்பாடு இருந்தால் தான் இந்த சட்டத்தை நடைமுறைப்படுத்துவதைப் பற்றி யோசிக்கவே முடியும். ஆனால், எதனையும் ஏற்படுத்தாமல் சட்டத்தை மட்டும் இயற்றி என்ன பயன்.
இன்னொரு பக்கம் இந்த சட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு தனியார் பள்ளிகளில்
ஏழை மாணவர்களுக்கு 25 சதவீத இட ஒதுக்கீட்டினை வாங்கித் தர அரசு ஏற்பாடு செய்தது.
ஆனால், அதற்கான எந்த ஒரு நிதியினையும் மத்திய மாநில அரசுகள் கொடுக்கவில்லை.
வணிக நோக்கில் கல்வி நிறுவனங்களை நடத்தி வரும் தனியார் பள்ளிகள் இனி வரும் கல்வி ஆண்டில் 25 சதவீத இட ஒதுக்கீட்டின் கீழ் மாணவர்களை சேர்க்க முடியாது என்று கூறிவிட்டது. ஆக மொத்தத்தில் கல்வி இலவசமாக வழங்கப்படவில்லை என்பது வெளிப்படையான உண்மை.
ஒரு அரசு தன் நாட்டு மக்களை சிறந்த நிபுணர்களாக மாற்ற கல்வியைத் தரமாக வழங்க வேண்டும்.
அதனை இலவசமாக வழங்க வேண்டியது அரசின் கடமை. கல்வி வழங்குவதை தனியாருக்குத் தாரை வார்த்தால் “பணம் படைத்தோருக்கு மட்டுமே கல்வி” என்ற வணிகமயமாக்கலின் இழிநிலையை ஒவ்வொரு குடிமகனும் அனுபவிக்க வேண்டும் என்பது கண்கூடு.
அரசு பள்ளிகளின் தரத்தையும் உட்கட்டமைப்பு வசதிகளையும் மேம்படுத்தி அரசுப் பள்ளிகளின் எண்ணிக்கையை கூட்டினால் மட்டுமே அனைவருக்குமான தரமான இலவச கல்வி நடைமுறை சாத்தியமாகும்.
இத்தகைய திட்டங்களை வலியுறுத்தி வருகின்ற 16.05.2015 அன்று காலை 10.30 மணியளவில் உக்கடம் அருகில் கவன ஈர்ப்பு ஆர்பாட்டத்தை  இந்திய மாணவர் இஸ்லாமிய அமைப்பு SIO கோவை  நடத்தியது.


நன்றி,
முஹம்மது அலி MBA
செயலாளர்,
மக்கள் தொடர்பு,
SIO கோவை.
தந்தை பெரியார் அம்பேதகர் வாசகர் வட்டத்தினை(APSC) தடைசெய்ததை
கண்டித்து SIO கோவை நடத்தும்
‪#‎தடையை_மீறி_போராட்டம்‬

சென்னை ஐ.ஐ.டி கல்வி வளாகத்திற்குள் இயங்கி வரும் தந்தை பெரியார் அம்பேதகர் வாசகர் வட்டத்தினை மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சகம் தடைசெய்ததை இந்திய மாணவர் இஸ்லாமிய அமைப்பு (sio) வன்மையாகக் கண்டிக்கின்றது.

பிரதமர் மோடி தலைமையில் மத்திய அரசு பொறுப்பேற்றதிலிருந்து தொடர்ச்சியாக இதுபோன்று பல்வேறு செயல்பாடுகளை சிறுபான்மையினர் மற்றும் பிற்படுத்தப்பட்டவர்களுக்கெதிராக செய்து வருவது நாட்டின் அமைதியை சீர்குலைக்கும் செயல் என இந்திய மாணவர் இஸ்லாமிய அமைப்பு (sio) கருதுகின்றது.

மோடி அரசின் குறைகளை விமர்சித்ததற்காகவும், பெரியார் மற்றும் அம்பேத்கரின் கருத்துக்களை மாணவர்கள் மத்தியில் பரப்பியதற்காகவும் இந்த வாசகர் வட்டம் தடைசெய்யப்பட்டுள்ளது.

ஜனநாயக நாட்டில் தாங்கள் சார்ந்துள்ள சித்தாந்த்தை அல்லது அதன் தலைவர்களின் கருத்துக்களை கூறுவதற்கு அனைவருக்கும் உரிமை உள்ள நிலையில், மத்திய அரசின் இத்தகைய போக்கு கருத்துச் சுதந்திரத்தின் குரல்வளையை நெருக்குவதாக உள்ளது. மேலும், தன் குறைபாடுகளைக் குறித்த விமர்சனங்களைத் தாங்கிக் கொள்ள முடியாத பலவீனமான அரசாக இன்றைய மத்திய அரசு செயல்படுகின்றது.

அண்ணல் அம்பேத்கர் அவர்களும், தந்தை பெரியார் அவர்களும் நம் நாட்டிற்கு அளப்பரிய பங்காற்றியுள்ளார்கள். இவரகள் இருவரும் உலகளாவிய தலைவர்கள். இவரக்ளைப் பற்றியும், அவர்கள் கூறிய கருத்துக்களைப் பற்றியும் பேசும் போதுதான் நாட்டில் சமத்துவம் உயிர்த்தெழும்; ஜாதியமும், மூட நம்பிக்கைகளும் நம்மைவிட்டு ஒழிந்து போகும்.
இவர்களின் கருத்துக்களை நினைவு கூறுவதன் மூலமே நாட்டை வளர்ச்சிப்பாதையில் அழைத்து செல்ல முடியும். இத்தகைய சிந்தனை மற்றும் செயல்பாட்டிற்கு எதிராக மத்திய அரசு செயல்படுவது சிறுபான்மையினர் மற்றும் பிற்படுத்தப்பட்டவர்களுக்கெதிராக செய்யப்படும் அநீதி என இந்திய மாணவர் இஸ்லாமிய அமைப்பு (sio) கருதுகின்றது.

மேலும் தந்தை பெரியார், அம்பேத்கர் வாசகர் வட்டம் சிறப்புற செயல்படுவதற்கு மத்திய அரசும், ஐ.ஐ.டி கல்வி வளாகமும் அனுமதியளிக்கும்படி இந்திய மாணவர் இஸ்லாமிய அமைப்பு (sio) கேட்டுக் கொள்கின்றது. இதனை வலியுறுத்தி இன்று (2/06/15) மாலை 4:30 மணிக்கு உக்கடத்தில் வைத்து தடையை மீறி போராட்டம் நடைபெற இருக்கிறது.