திங்கள், 1 ஜூன், 2015

தந்தை பெரியார் அம்பேதகர் வாசகர் வட்டத்தினை(APSC) தடைசெய்ததை
கண்டித்து SIO கோவை நடத்தும்
‪#‎தடையை_மீறி_போராட்டம்‬

சென்னை ஐ.ஐ.டி கல்வி வளாகத்திற்குள் இயங்கி வரும் தந்தை பெரியார் அம்பேதகர் வாசகர் வட்டத்தினை மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சகம் தடைசெய்ததை இந்திய மாணவர் இஸ்லாமிய அமைப்பு (sio) வன்மையாகக் கண்டிக்கின்றது.

பிரதமர் மோடி தலைமையில் மத்திய அரசு பொறுப்பேற்றதிலிருந்து தொடர்ச்சியாக இதுபோன்று பல்வேறு செயல்பாடுகளை சிறுபான்மையினர் மற்றும் பிற்படுத்தப்பட்டவர்களுக்கெதிராக செய்து வருவது நாட்டின் அமைதியை சீர்குலைக்கும் செயல் என இந்திய மாணவர் இஸ்லாமிய அமைப்பு (sio) கருதுகின்றது.

மோடி அரசின் குறைகளை விமர்சித்ததற்காகவும், பெரியார் மற்றும் அம்பேத்கரின் கருத்துக்களை மாணவர்கள் மத்தியில் பரப்பியதற்காகவும் இந்த வாசகர் வட்டம் தடைசெய்யப்பட்டுள்ளது.

ஜனநாயக நாட்டில் தாங்கள் சார்ந்துள்ள சித்தாந்த்தை அல்லது அதன் தலைவர்களின் கருத்துக்களை கூறுவதற்கு அனைவருக்கும் உரிமை உள்ள நிலையில், மத்திய அரசின் இத்தகைய போக்கு கருத்துச் சுதந்திரத்தின் குரல்வளையை நெருக்குவதாக உள்ளது. மேலும், தன் குறைபாடுகளைக் குறித்த விமர்சனங்களைத் தாங்கிக் கொள்ள முடியாத பலவீனமான அரசாக இன்றைய மத்திய அரசு செயல்படுகின்றது.

அண்ணல் அம்பேத்கர் அவர்களும், தந்தை பெரியார் அவர்களும் நம் நாட்டிற்கு அளப்பரிய பங்காற்றியுள்ளார்கள். இவரகள் இருவரும் உலகளாவிய தலைவர்கள். இவரக்ளைப் பற்றியும், அவர்கள் கூறிய கருத்துக்களைப் பற்றியும் பேசும் போதுதான் நாட்டில் சமத்துவம் உயிர்த்தெழும்; ஜாதியமும், மூட நம்பிக்கைகளும் நம்மைவிட்டு ஒழிந்து போகும்.
இவர்களின் கருத்துக்களை நினைவு கூறுவதன் மூலமே நாட்டை வளர்ச்சிப்பாதையில் அழைத்து செல்ல முடியும். இத்தகைய சிந்தனை மற்றும் செயல்பாட்டிற்கு எதிராக மத்திய அரசு செயல்படுவது சிறுபான்மையினர் மற்றும் பிற்படுத்தப்பட்டவர்களுக்கெதிராக செய்யப்படும் அநீதி என இந்திய மாணவர் இஸ்லாமிய அமைப்பு (sio) கருதுகின்றது.

மேலும் தந்தை பெரியார், அம்பேத்கர் வாசகர் வட்டம் சிறப்புற செயல்படுவதற்கு மத்திய அரசும், ஐ.ஐ.டி கல்வி வளாகமும் அனுமதியளிக்கும்படி இந்திய மாணவர் இஸ்லாமிய அமைப்பு (sio) கேட்டுக் கொள்கின்றது. இதனை வலியுறுத்தி இன்று (2/06/15) மாலை 4:30 மணிக்கு உக்கடத்தில் வைத்து தடையை மீறி போராட்டம் நடைபெற இருக்கிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக